உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலேயொளி உண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப் போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்று பதவி கொள்வார்
தெள்ளுற்ற தமிழமுதின் சுவை கண்டார்
இங்கமரர் சிறப்பு கண்டார்
- மகாகவி சுப்ரமணிய பாரதியார்